பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

(நிலையான இடமின்றி) ஊர் ஊராய் வழி நடந்து தங்கி வாழாதிருத்தல் மிகவும் இனிது. (இதுவோ அதுவோ என்று) இரு பிரிவுக் கருத்துக் கொள்ளாமல் (உண்மைக் கருத்தைத் துணிந்து கொள்ளும்) கூரிய அறிவு இனியது. உயிர்போய் இறப்பதாயினும், உண்ணத்தகாத அற்பரின் கையுணவை உண்ணாத பெருமை போன்ற வேறு பெருமைச் செயல் இல்லை.

11

குழந்தை நோயின்றி வாழ்தல் இனிது. பேசும் சபைக்கு அஞ்சாதவனின் கல்வி இனியது. மயக்கம் அற்றவராய் நல்ல பண்புடையாரைச் சேர்ந்து வாழும் செல்வம் நீங்கா தாயின் இனிது அது.

12

மானம் போனபின் வாழாமை முன் இனிது. தானம் செய்வது கெடாமல் தான் அடக்கமாய் வாழ்தல் இனிது.தவறான வழியில் இன்றி உயர்ந்த முறையில் வந்த செல்வம் உடைமை மாந்தர்க் கெல்லாம் இனியது.

13

குழந்தை தத்தித் தத்தி நடக்கும் தளர் நடையைக் காண்பது இனிது. குழந்தையின் மழலை மொழியைக் கேட்பது அமிழ்தத்தினும் இனிது. தீவினை (விஷமம்) உடையவன் வந்து சேர்ந்ததால் (மனம்) வெந்து வருந்தும்போதும் மனம் அஞ்சாதவனாய் இருத்தல் இனிது.

14

பிறன் மனைவியைத் திரும்பியும் பாராத பெருந்தன்மை இனியது. வறட்சியால் வாடும் பயிருக்கு மழை சொரிவது இனிது. வீரவேந்தரின் கடை வாயிலில் மலை போன்ற யானையின் மதங்கொண்ட பிளிறலைக் கேட்பது இனிது.

15