பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தன்னை நத்தி வந்தவரின் விருப்பத்தை அழிக்காத பெருந்தன்மை இனிது. நாணம் இல்லாத வழியில் வாழாத ஊக்கம் மிகவும் இனிது. எந்த வழியிலாயினும் தம்மால் உதவ முடிந்தவற்றை மறைக்காமல் தரும் அன்புடமையினும் இனிய பண்பு இல்லை.

26

தானம் தருபவனது தக்க கொடைவீரம் முற்பட இனிது. மானம் கெட நேரின் வாழாண்ம முன் இனிது. குற்றம் பாராட்டாமல், உறுதி (பயன்) கொடுப்பவற்றைக் கொள்ளும் முறையில் கொள்ளுதல் இனிது.

27

ஒன்றைச் செய்ய முடியாதவனைச் செய் என்று வருத்தாமை முன் இனிது. எமன் வருவது உண்மை என எண்ணி அதற்கேற்ப வாழ்தல் இனிது. செல்வம் அழிந்தாலும் முறை அல்லாதவற்றைக் கூறாத பட்டறிவினும் இனிய பட்டறிவு வேறு இல்லை.

28

கீழ்மக்களைக் கைகழுவிவிட்டு வாழ்வது இனிது. வளர்ச்சி உயர்வை எண்ணி ஊக்கம் உண்டாதல் இனிது இவர் தாழ்ந்தவர் என்று எவரையும் இகழ்ந்து பேசா தவராய்ப் புகழ் பெற வாழ்வது இனிது.

29

பிறர் செய்த நன்றியின் பயனைச் சீர்தூக்கிப் போற்றி வாழ்வது மிகவும் இனிது. நீதிமன்றத்தில் கொடிய உரை கூறாத பெருந்தன்மை இனியது. தம்மிடம் ஒருவர் அடைக்கலமாகக் கொடுத்த ஒன்றை, அன்ற அறிந்தவர் யாரும் இல்லை என்று தான் உரிமையாக்கிக் கொள்ளாத நற்செயலினும் இனிய நற்செயல் வேறில்லை.

30