பக்கம்:இனிய கதை.pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

மூன்றையும் கொடுபபதாகக் 'கையடிதது' க் கொடுத்து விட்டுக் கடைசியில் ஒர் இரவிலே அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் உடல், பொருள், ஆவியில் ஒன்றையும் அவளுக்கென்று மிச்சம் வைக்காமல், மண்ணில் பதிந்து விண்ணுக்குச் சென்று விட்டான்! கொண்டவனும் கொண்டவளும் குப்பை கொட்டிய லட்சணத்துக்கு அடையாளமாகக் கிடைத்த பரிசான பதினறு வயசு இள வட்டம் அக்கரைச் சீமைக்குச் சென்று இக்கரைக்கு ‌ வராமலேயே நாதியற்றுச் செத்து மடிந்து விட்டது.

‌"நானு ஏதுக்காவ உசிரோடு இருக்கோனும்”?_ அலுத்துச் சலித்துப் போன தருணம் பார்த்து, இக் கேள்வி சம்மட்டியாக உருவாகி, அவளது தளர்ந்த நெஞ்சத்தினை மேலும் தளர்ச்சியடையச் செய்யத் தவறு வது கிடையாது. ஒருநாள். இரண்டு நாள் அனுபவம் மட்டும் அல்லவே இது?

வடித்த கஞ்சியின் சூடு ஆறிவிட்டது; வடிந்த கண் னிரின் வெம்மை தனிந்தது. கிழவிக்குச் சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. காய்ச்சின கஞ்சி, வெங்காயம், உப்புக்கற்கள், துகையல் எல்லாம் அவளை வருந்தி அழைத்தன. குவளையில் கஞ்சியை ஊற்றினுள், மடக் மடக் என்ற சத்தம் மூன்று விடிைகளுக்கு ஒருமுறை கேட்டது. அரைக்கால் நாழி கூடத் தாண்டியிராது. கிண் கிண் என்று அவளுக்குத் தலை கனத்து வந்தது. பிறகு சுற்றவும் ஆரம்பித்தது. மறுவினுடி அவள் வாந்தி பண்ணிவிட்டாள், அந்தி சந்திப் பொழுதிலே படுக்கக் கூடாதென் பார்கள் நாலுந் தெரிந்தவர்கள். இதற்குச் செல்லாயி விதி விலக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/11&oldid=1491249" இலிருந்து மீள்விக்கப்பட்டது