131
119
வேணும். நேத்துச் சந்தையிலே காய்கறி வியாபாரத் திலே கிடைச்ச லாபப் பணம் இருபதையும் பத்திரமா வச்சிருக்கேன், விருந்தாளிங்க ரெண்டுபேருக்கும் விருந்து வைக்கிறதுக்கு, தங்கசசியும் அது மச்சானும் வந்துட்டா அப்புறம் வீடே ஒரே குஷாலாகத் திமிலோகப் பட்டுப் போயிடும்..." என்று நிறைவுப் பெருக்குடன் சொல்லிக்கொண்டு வந்த மாணிக்கம்’ தலையை நிமிர்த்திப் பூரணியைப் பார்த்தான். கணப் பொழுது அவன் திகைத்துப் போனன்.
"மச்சான் ..... " என்று ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த அவள் மீண்டும் பேசா மடந்தையாளுள். அவள் கண்களின் விளிம்பில் பணித் திரை லேசாகப் படர்ந்தது.
"பூரணி, எதுக்கு இந்த நீலி வேஷமெல்லாம்?” என்று கர்ஜித்தான் மாணிக்கம், மனைவியின் மெளனத் திற்கு அவன் தப்பான அர்த்தத்தை மனசில் கொண்டு விட்டான். அதாவது தன் மனைவி தன் தங்கை மச்சான் இருவரையும் ஆடிப்பெரூக்கிற்கு இணங்கவில்லை என்று.
"மச்சான் என்னைப்பத்தி ஏதாவது தப்பா எண்ணிப் பிட்டிங்களா? உங்க தங்கச்சியையும் அது புருஷனையும் ஆசையோடே வரவேற்கிறதிலே உங்களை விட எனக் குத்தான் ரொம்பவும் சந்தோசம். ஆளு நம்ப ஆசை எண்ணம் ஈடேறத்தான் வழி கிடைக்கல்லே, உங்க தங்கச்சியை அது புருஷன் நேத்தி இரவு அடிச்சுப் போட்டு வீட்டை விட்டுத் துரத்திப்பிடுச்சாம். நீங்க காலம்பெற வீட்டை விட்டு வயல் கரைக்குப் போனதும் பூவம்மா இங்கே வந்துச்சு கண்ணிரும் கம்பலையுமாக, வயலிலேயிருந்து களைச்சுப்போய் வந்ததும் வராதது