உங்களுடன் ஒருகணம்.
குறிப்பிட்ட ஒரு கதையின் பெயரை தொகுதிக்கு மகுடமாகச் சூட்டி மகிழ் இலக்கிய உலகில் ஒரு சம்பிரதாயமாகவே வருகிறது. இந்நிலையிலே, நா னு, இத் தெ “ இனிய கதைகள் " என்ற பொதுப்படைய தலைப்பைச் சூட்டி வெளியிட்டிருக்கிறேன். சிந்தனை துரண் டிவிடக்கூடிய கதைகள் சில இதில் இடம் உள்ளன. இக் கதைகளின் ஊடேஅதற்குரிய இயல்பு. இனிமைப் பண்பும் இழையோடிக் கிடக்கிறது.
ஆகவே, " இனிய கதைகள் " என்ற தலைப பொருந்திவிடுகிறதல்லவா ?
சரி!
இப்போது, ஒரிரு ஏடுகளில் ஓர் அதிசயத்தைக் கண்டேன். சிறு கதைகளைப் பற்றிய ஞான மற்றவர்களுக் கெல்லாம் நூல்களை விமர்சனத்துக்கு அனுப்புகிருர்கள். அதாவது, அத்தகைய விமர்சன பூசாரிகள் அங்குலக் கணக்கில் பணம் வாங்க சிபாரிசுமூலம் விமர்சனத்துக்குப் புத்தகங்களை வாங்கிக்கொள்கிருர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, யாரோ ஒரு பாணர் என்னுடைய ஒரு கதைத் தொகுப்பை விமர்சனம் செய்யும்போது, அச்சகத்தில் ஏற்பட்ட பிழைகள் என்ற உண்மைகூட புரியாமல், என் பேரில் பழியைச் சுமத்தினர். அச்சுப் பிழைகள் இருந்த வரிகளையெல்லாம் எழுதிக்காட்டினர். அவ் விமர்சனத்தில் அவர்செய்த பிழைகளுக்கு யார் பதில் சொல்வார்களோ? ஆக, வரிகள் கூடினுல்தானே பணம் அதிகம் கிடைக்கும்!.. இப்படிப்பட்ட ஞான சூன்யங்களிடம் விமர்சனப் பணியை ஒப்படைக்காமல் இருக்கவேண்டியது பத்திரிக்கைகளின் கடமையாகும்!