பக்கம்:இனிய கதை.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

55

                    55
அங்கே கண்ட காட்சி அவன் அளவற்ற அனுதாபத்திற் குள்ளாக்கியது. பாவம், துடித்துக்கிடந்தான் வடிவேலு. தன்னை எதிர்க்க அத்தனை ஆள் கட்டுடன் வரும்போது தான் இப்படி அவனுக்குத்  தேள்  கொட்டியிருக்ற தென்பதை அறிந்ததும் அவனுக்கி ஒருபுறம் வியப் பாகவும் இருந்தது.
 "கண்மணி, ஐயனுரு எனக்குக் கண்ணைத்திறந்து விட்டிருச்சு. வழக்கத்தை விடாமல் காலம்பற குதிரை எடுப்புத் தொடங்கி திருநாளை சிறப்பா நடத்த ஏற்பாடு பண்ணு. உன்  பொறுமைக்கு ஈடேயில்லை. உனக்குத் தீங்கு பண் ண எண்ணின என்னை சாமி செம்மையா தண்டிச்சுப்பிட்டாரு, ஐயோ; வலி பொறுக்கலையே...... ..... " என்று புலம்பிப் புரண்டான் வடிவேலு.
 உடனே கண்மணியின் முயற்சியால் விஷம் லேசாக இறங்கிவந்தது. மறுபிறவி பெற்ற வனப்போல வடிவேலு களிப்புற்ருன்.
உலக ஞாபகம் அப்பொழுதுதான் வரப்பெற்றவர் களைப்போலப் பூவாயியும் மாணிக்கமும் ஒருவரை யொருவர் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டனர்.
 "மாணிக்கம்,  உங்களுக்கு  நானும் அத்தானும் ரொம்ப  ரொம்பக்  கடமைப்பட்டிருக்கோம். இந்த இரண்டு வருசமா உங்களைக் கண்ணுலே காணக்கூட முடியலேயே. நீங்கமட்டும்தான் வந்தீங்களா? உங்க பெண்டாட்டியையும் கூட்டிவாரதுதானே திருநாளைக்கு” என்று வாத்ஸல்யம் வழிந்தோடச் சிறு குழந்தையைப் போலக் கேட்டாள் பூவாயி.

"பூவாயி, எனக்குப் பெண்டாட்டியா? நிகரற்ற ஏழை அனைத்துக் கல்யாணம் ஒன்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/40&oldid=1490124" இலிருந்து மீள்விக்கப்பட்டது