பக்கம்:இனிய கதை.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56

                  56

குறைச்சலா? அதைப்பற்றிய கவலைகூட எனக்குக் கிடையாது. ஆளு இன்னிக்குத்தான் எனக்கு என்னைப் பழைய மாணிக்கமாட்டம் தோணுது. அந்த நாளிலே உன்ளுேட பேசிப் பழகியதைத் தப்பா நினைச்சு உன் அப்பா என்னைத் துாஷனே யாப் பேசினர். ஆன இந்த விளக்குப் பொதுவாச் சொல்றேன், உன்னைப்பற்றி எனக்கு எந்தவிதமான கல்மிஷமும் கிடையாதுங்கிறதை நீயாச்சும் உணராமலா இருந்திருப்பாய்? உன்னை என்னை க்கு முதல்முதல் கண்டேனுே அப்பவே எனக்குப் புதுத்தெம்பும் உயிரும் வந்திருச்சு. உன்னைப் பார்த் ததும் காய்ச்சலிலே செத்துப்போன என் தங்கச்சி மறு பிறவியெடுத்து வந்திருப்பது கணக்கா நெனேச்சுட் டேன். என் தங்கச்சி மாதிரியே அசலா இருக்கு உன் முகச்சாயல்' அவன் கண்களில் கண்ணிர் மிதந்தது.

'தங்கச்சி’ என்ற பாசம் நிறைந்த அழைப்பைக் கேட்டதும் ‘அண்ணுச்சி' என்று பதில் விடுத்தாள் பூவாயி. புதையல் எடுத்த பொருளைப் போலப் பூவாயியை அழைத்துக் காதோடு காதாக ரகசியம் பேசினன் கண்மணி. அதைக் கேட்டதும் பூவாயிக்கு வாயெல்லாம்பல்லாகப் பரிணமித்து விட்டது. அவளுக்கு உடம்பு புல்லரித்தது!

பூவாயியும் கண்மணியும் பிரமாதமாக அப்படி என்ன ரகசியம் பேசிவிட்டார்கள்  என்று தானே எண்ணு கிறீர்கள்? அடுத்த நாள் ஐயனர் கோவில் திருவிழா விற்கெனக் கண்மணி தன் தங்கச்சியை வரவழைத்தான் அவள் பெயர் அமிர்தம், அழகுப் பாவையான அவளைக் கண்டதும் மாணிக்கம் அப்படியே சொக்கிவிட்டான். தங்களுடன்  மாணிக்கம்  என்றுமே தங்கவேண்டு மென்பது அவர்களது  ஆசை.  அதற்கு  அமிர்தத்தை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/41&oldid=1490125" இலிருந்து மீள்விக்கப்பட்டது