இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
62
62
தினேவுக்கு வருகிறது. நிஜமாகவே நான் அப்போ தெல்லாம் அழகின் உருவாகத்தான் திகழ்ந்துகொண் டிருந்தேன். அது ஒரு காலம்; இன்பப் பொழுது அது. அப்போதுதான் என்னை சேகரன் வலைவீசிப் பிடித்தார். என் அழகு அவரைக் கொள்ளை கொண்டதாம். எனக்கும் அவரைப் பிடித்துவிட்டது. கண் நிறைந்திருந்தார்; பி ஏ.நடுத்தரக் குடும்பத்தினர். தேடிப்போன மூலிகையாகபெண் பார்க்கப்போன பயணத்தில் நான்சிக்கினேளும்; வலை தானுகவே விரிக்கப்பட்டதாம். கண்ணி வைத்து விசிறிப் பிடித்துக்கொண்ட வெற்றியில் எனக்குக்கூடப் பங்கு உண்டாம். ஏனென் ருல் நான் அவரின் மறு பாதியாம்__இதையெல்லாம் நினைத்துக் கொண்டால் இப்போது அழுகை முட்டி வருகிறது. அந்த என் உயிர்த்துணை வர்தானு இன்று என்னை இப்படி வெறுத்து ஒதுக்கி விட்டார்.. ? கால மலரின் இரண்டு இதழ்கள் உதிர்வதற்குள்ளாகவே மலர் வாடி விடுவதா, என்ன?...
என்னவோ தோன்றியது; திரும்பினேன்; பார்த் தேன். வீட்டின் முன்பகுதித் தோட்டத்தில் அப்போது தான் முகையவிழ்ந்திருந்த மலரின் மதுவை உண்டு திளைத்துவிட்டு, மற்ருெரு மலருக்குத் தாவியோடிக் கொண்டிருந்தது வண்டொன்று.
வண்டு! எண்ணினேன். என் பதி தோன்றினர். முதல் மலரைப்பற்றி நினைத்தேன். என் நிலை நினைவில் கிளைவிட்டது. சந்தர்ப்பங்கள் எப்படி எப்படியெல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் கருக்கொண்டுவிடுகின்றன?
காபியும் கையுமாக கமலா என் சமீபம் வந்தாள். நான் அழுது கொண்டிருந்ததைக்கண்டுவிட்டாள். நான் கண்ணிரைத் துடைத்துக்கொண்டேன். கடவுள் போல