இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
66
66
"உரிமையா? யார் உரிமை அது? யார் கொடுத்த உரிமை...? நீ இனி என்றுமே என் ஆசை மனைவியாகப் பள்ளியறை நாடமுடியாது...உன் கண் முன்னலேயே அடுத்த மாசம் நான் வேருெரு திருமணம் செய்து கொள்ளுகிறேன். நன்ருகப் பார், என் சபதம் நிறை வேறுவதை...!" என்று வெறியுடன் முழங்கினர் அவர்.
"சபதமா செய்கிறிர்கள்? அப்படி உங்கள் கல்யாணம் நடந்தால், அது என் சாவின் அஸ்திவாரத் தில் தான் நடக்குமென்கிறதை மட்டும் ஞாபகம் வைத் துக்கொள்ளுங்கள் என்று பதில் கபதம் போட்டுவிட்டு நான் ஓடிவந்து படுக்கையில் விழுந்து இரவெல்லாம் அழுது தீர்த்தேன். இப்படிப்பட்ட இரவுகளுக்கு என் வரை கணக்கேது?
பட்டணத்தில் என் கணவரின் முறைப்பெண் ஒருத்தி இருக்கிருளாம். ஆரம்பத்தில் அவளைத் தான் மணப்பதாக இருந்ததாம் ஆளுல் அந்தப் பெண்ணை விட என் அழகுதான் அன்று என்னிடம் அவர் அப்படித் தஞ்சமடையச் செய்தது ஆணுல், இன்றே...
அவர் அந்தப் பட்டணத்துப் பெண்ணைக் குறி வைத்து, மணம் முடிக்கத்தான் நேற்றுப் பட்டணம் போயிருக்கிருர் போலும்! அவர் சபதம். ஐயோ...! ஆளுல் நான்... என் உரிமை...!
"மங்களம், நிஜமாகவே உனக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். உன்னை மனைவியாக அடைய நான் பூர்வ ஜென்மத்தில் மிகவும் புண்ணியம் செய் திருக்கவேணும்...!”