பக்கம்:இனிய கதை.pdf/54

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

69

                   69


      விரும்பிய தாசி வீட்டுக்கு இட்டுச் சென்ற 
       நளாயினி கதை அதில் இருந்தது.


         கதையை எண்ணினேன்; என் 
          கதையையும் எண்ணினேன்.


      அன்று, என் உயிருள்ள மட்டும் என் 
     உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென்று 
    அவரிடம் செய்த சபதம் என்னை இப்போது 
   கேலி பண்ணியது. கொண்ட பதியின் இன்பமே 
    தன் இன்பம் என்று கருதிய அந்தப் பெண் 
   தெய்வம் நளாயினியின் கதை என் மனத்தை 
   அரித்தது; சித்திரவதை செய்தது. அந்த 
   நளாயணி மாதிரி நானும் ஒர்பெண் தெய்வமாக 
   ஏன் ஆகக் கூடாது...? மின்னல்; முடிவு !என் 
  மனச்சாட்சியின் வேதனை, என் முடிவில் நிம்மதி 
  கண்டதோ?


         "கமலா, கமலா !”
              " அக்கா "
       " கமலா, இன்றைக்கு ராத்திரி மெயிலுக்கு 
       நான் மெட்ராஸ் போகவேண்டும். என் 
      புருஷனிடம் போய் என் தவறுக்கு மன்னிப்பு 
     வேண்டி, நானே முன் நின்று அவர் விரும்பும் 
    பெண்ணுடன் அவர் கலியாணத்தை 
   முடித்துவைக்கப்போகிறேன். கமலா, 
   ஆச்சரியப்படு கிருயா? என்னிடம் இனி அவர் ‌‌ 
    எ‌‌ன்ன இன்பத்தை எதிர்பார்க்க முடியும் என்று 
   சிந்தித்துப் பார். உனக்கு என் இந்த 
    மாற்றத்தின் காரணம் பதில் கூறும்......"  என்றேன்.



        ‘பூம்... பூம்’


    வாசலில் டாக்ஸி ஒன்று ஹார்ன் .ெ கா டு த் 
    து நின்றது. அடுத்த கணம் நான் என் 
   கண்முன் கண்ட காட்சி...! "ஐயோ!" என்று 
  அலறினேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/54&oldid=1490342" இலிருந்து மீள்விக்கப்பட்டது