பக்கம்:இனிய கதை.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74

                   74


     அடிப் பாதங்களைத் தார் ரஸ்தாவில் 
     தீர்க்கமாகப் பதித்த வண்ணம் நின்ருன் 
     சுடுநீரில் விழுந்த சுண்ணும்புக் 
     கிளிஞ்சல்களென அவன் மனம் பொங்கி 
     எழுந்தது. 'முத்தாயிக்கு உடம்பு 
     சொகமாயிடுமா? பொழுதுக்குள் ளாற நாலு 
     மூணு சம்பாரிச்சு, சுருக்குப் பையிலேயிருக் 
     கிற துட்டையும் சேர்த்தடிச்சு, நல்ல டாக்டர் 
     கிட்ட அதை இட்டுக்கினு போய்க் காட்டி  
     வைத்தியம் வாகனம் செஞ்சாத்தான் முறைக் 
      காச்சல் ஒரு முட்டா நிற்கும்...கார்ப்பரேஷன் 
      மருந்துக்குத்தான் சீக்குபடிய 
      மாட்டேங்குதே!...ஏழை 
      பாழைங்ககிட்டயிருந்து பணம் காசு 
     விலகியிருக்காப்பிலே, நோய் நொடியும் 
      தள்ளிக் குந்தப்படாதா?...என்று எண்ணி 
     மருகிளுன் அவன். கலங்கி வந்த 
    கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். 
    நாகரீகத்தின் கெடுபிடிக்கு இலக்காகி நடை 
   பயின்ற இளம் தம்பதியை ஒதுக்கியவாறு 
   திரும்பினன். "சவாரி வேணுமா, சாமீ?" 
  என்ருன். சுமுகமான பதில் வரவில்லை. அவன் 
   ரிக்ஷாவுடன் ஒடத் தொடங்கினுன், ஒடினவன் 
  ஓர் உருவத்தைக்  கண்டு மகிழ்ந்தான். 
   உருவத்தின் ஸ்லாக் சட்டையில் தலை 
   காட்டியவாறு இருந்த ஸ்'டெதஸ் கோப்' கருவி 
  அவனுள் பாலை வார்த்ததோ?


    "சாமீ, வண்டி வேணுமா? எங்கே போகணும்? 
   "என்று வினயமாக விளு விடுத்தான் 
   ரிக்ஷாக்கார மணிமுத்தன்.


    "தங்கச்சாலை வரை போகணும். ஒரு 
   அவசரமான விஷயம். எனக்காகக் காத்துக் 
   கொண்டிருப்பாங்க. சீக்கிரம் போயாகணும்!”
 " ஓ !...ஒரு நிமிட்டிலே ஒட்டமா ஓடிப்புட்றேன், 
சாமி!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/59&oldid=1490347" இலிருந்து மீள்விக்கப்பட்டது