இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
79
சுனே முழக்கம்
'ஆத்தாடி' என்று ஒரு கணம் வள்ளி அப்படியே நின்று விட்டாள். மேனியில் தவழ்ந்த ஈரப் புடவையும், இடுப்பிலிருந்த நிறைகுடமும்கூட அவளுக்கு அந்நேரம் வரைத் தன் நினைவைக் கொடுக்கவில்லை. சிமிழ் உதட்டோரத்தில் காந்தன் விரலொன்றை வைத்து ஆச்சரியப் பட்டுப் போனுள் அந்த வள்ளி.
ஆனந்த நடராஜர் கோவில் மணி 'டாண்- டாண் 'என்று முழங்கியது. கொட்டு மேளமும் நாதசுரமும் சோபனம் கொட்டி முழங்கின. கோவில் திமிலோகப் பட்டது. மார்கழி மாதத் திருவாதிரைத் திருநாள் அன்றுதான் தொடக்கம்; அதிலும் சுனை முழக்கம்’ திருவிழா என்ருல் இந்தப் பத்து நாளும் பூவை மாநகரம் இந்திரலோகம்தான் இனி...
"இன்னிக்கு சாமிக்குக் காப்புக் கட்டுருங்க போலே. அதுக்குள்ளாற ஒருவருசம் மின்னல்கணக்கிலே மறைஞ் சிருச்சே. நேத்துத்தான் சுனையிலே சாமி அம்பு போட்