இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
84
84
'ஐயா... ஐயா. இங்கே பாருங்க தங்கச் சங்கிலி ஒண்ணு வழி தப்பிக் கிடக்குது. இப்போ இதை என்ன செய்யுறது. சங்கிலிக்குச் சொந்தக்காரங்க யாருன்னு தெரிஞ்சாலாச்சும் கூப்பிட்டுக் கொடுக்கலாம். பாவம், யாரு சங்கிலியோ இது...' என்ருள் வள்ளி. அவள் பேச்சில் ஏன் இத்தனை பதட்டமும் பயமுமோ?
'நீ நீங்க எதுக்கு வீணு அலட்டிக்கிறீங்க? இப்போ நம் கண்ணிலே பட்டவரைக்கும் இது நம்ப சொத்துத் தான். ஊஹூம். இது உங்களுக்குச் சேரவேண்டியது தான்...'
அப்படியில்லே. நான் தான் கண்டேன்ஞலும் இப்போ நீங்களும் தானே இருக்கீங்க. இது நம்ப ரெண்டு பேருக்கும் சொந்தம்போலத்தான்...'
'எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்தச் சங்கிலி என்னேடே இருக்கட்டும். அதுக்குப் பதிலாக என் னுடைய பத்துக்கல் பவுன் மோதிரத்தை உங்ககிட்டே தந்திடுறேன். என்ன, சரிதான? என்ருன் ராஜபார்ட் காரன்,
வள்ளி ஊம் சொன்னன். அவள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது என்பதற்கு அடையாளம் இருந்தது அவளுடைய அந்த ஊம் உச்சரிப்பிலே. அவன் நீட்டிய மோதிரத்தை அவள் வாங்கிக்கொண்டபோது அவள் நெஞ்சில் இன்ப உணர்வு பிரவகித்தது.
சங்கிலியைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச் சென்றுவிட்டான். நாடகக்காரன்.
வள்ளி கைகொட்டிச் சிரித்தாள்: நாடகக்காரர் எங்கிட்டே ஏமாந்துட்டார். நான் வேணுமின்னே கீழே