இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
85
85
வீசிப்போட்ட செப்புச் சங்கிலியைத் தங்கமின்னு நம்பி, அதுக்குப் பதிலாக ஒசத்தியான, ரொம்பப் பெறுமதி கொண்ட பவுன் மோதிரத்தை எங்கிட்டே கொடுத் துட்டுப் போயிட்டாரே...நல்ல ஆண்பிள்ளே இது...!
ஆளுல் அதே சிரிப்பு பிறகு அழுகையாக மாற அப்புறம் அரைக் கணம்கூட ஆகவில்லை ". ஐயையோ' நாடகக்காரருக்கு நிஜம் தெரிஞ்சு அதுவெறும் செப்புச் சங்கிலி என்கிற சேதியும் புரிஞ்சிட்டுதானு, அப்பாலே விசயம் அப்பா காதுக்கு எட்டும்; அப்பன் அரிவாளைத் தூக்கிகிட்டு வந்திடுமே எங்கிட்டே 'மூளும் மனுசங்கிட்டே என்ன சொல்லனுமின்னு..." என்று மனம் மருகிளுள் பேதை வள்ளி.
மூன்ரும்பேருக்கு இந்தச் சம்பவம்பற்றி மூச்சுக் காட்டாமல் காதும் காதும் வைத்த மாதிரி அந்த மோதிரத்தை எடுத்து சேலை மு ந் தா ன யி ல் முடிந்துகொண்டு 'கமுக்க'மாக நாடகக் கொட்ட கையை நாடிச் சென்ருள். ராஜபார்ட்காரனிடம் மோதிரத்தைக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால்தான் அவளுக்கு நல்ல மூச்சு வரும் என்று சொன்னது அவள் உள் மனம், ஆளுல் ராஜபார்ட்காரன் அவசரத் தந்தி வந்ததன் பேரில் ஊருக்குப் போய் விட்டதாகச் செய்தி கிடைத்தது அவளுக்கு. கல்லாய்ச் சமைந்து போனுள் காரிகை. டவுன் மோதிரம் பத்துக் கற்கள் புடைசூழ எங்கோ இருட்டறையில் அடுக்கு மிளகாய்ப் பானையி னடியில் அஞ்ஞாத வாசம் புரிந்தது வள்ளியின் பாரா வின் கீழ்.
நாடகக்காரனின் ஆசைமுகம் காணக் கொடுத்து வைத்த சுனை முழக்கம் விழாவை வாழ்த்திய வள்ளி இப்போது அதன் மீது ஆத்திரப்பட்டாள். ஊரும் ஊரார்