இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
87
87
நாலைஞ்சு ராவுக்கு பொழுது ஒரே கூத்தாத்தான் இருக் கும். ஆயாகூடவே நலியாம நாடகத்துக்குப் போயிட வேணும்' என்று மனக்கோட்டை கட்டினுள் வள்ளி.
அதே தருணம், மத்தியானம் தன் கல்யாணப் பரிசம் பற்றிச் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டாள் அவள்! "பரிசமாமே, பரிசம்...எனக்கா? ஏதுக்கு? முன்னே பின்னே தெரியாத பூவத்தகுடி மாப்பிள்ளைக்கு நான் வாழ்க்கைப்பட வேணுமாம். சிங் காரமாமே... சிங்காரம்! பேரு தான் சிங்காரமா யிருக்குது இது தாளுங்காட்டியும் என் ஆசை மச்சாளுகி வந்து மஞ்சள் கயிற்றை என் கழுத்திலே முணூ கடுத்தம் முடியப் போவுது. ஆளு என் கனவை யாரு அறிவாங்க? அந்த நாடகக்கார சுகுமாரன் மட்டும் அறிஞ்சிட்டாப் போதுமே, அப்பாலே என் கன பலிச்சிடுமே. அவர் எனக்குக் கிடைப்பாரா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகிப் போயிடாதே.தெய்வமே... என்களு பலிக்குமா?’ என்று வள்ளி தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் !
பட்டிக்காட்டுப் பூவை பூலோக ரம்பையாக நின்ருள் சீவி முடித்திருந்தாள். அதில் ஒற்றை ரோஜாப்பு மின்னியது; முகத்தில் மஞ்சள் பூசி 'மா' இட்டிருந்தாள். அதில் புன்னகையும் போதையும் ஒளிவிட்டது; அவள் வள்ளி !
"வள்ளி திருமணம்' டிராமா பார்க்கப் புறப்பட்டாள் வள்ளி. அவளுக்குப் பாங்கிமார்கள் பவனம்பாள், கோவிந்தம்மா, ராஜாத்தி, பூவாயி. 'தாயைத் தன்னக் கட்டி' நாடகத்துக்குப் போய்வர அனுமதி பெற்ருள். அப்பனின் கண்ணில் மண்ணேத் தூவிளுள் மகள்.