இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
89
89
குடம் பிரிந்தது. அவள் மயக்கம் வளர்ந்தது. அப் பொழுது வள்ளி என்று ஒரு குரல் கேட்டது.
"பாவம், நீ தரையிலே அடிசாஞ்ச மரம் கணக் கிலே சாஞ்சிடப் போறியேன் னு ஒடியாந்தேன் ஒத்தா சைக்கு...' என்ருன் அந்த ஆள்.
வள்ளி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பயங்கர மான ராவணன் மீசையும், உப்பிய கன்னமும், உருட்டு விழிகளும் அவளை என்னவோ செய்தன. 'ஊம்...... அப்பாலே போங்க ஐயா. வயசுப் பொண்ணுகிட்ட ஒத்தாசைக்கு வர ஒங்களுக்கு எம்பிட்டு துணிச்சல் இருக்கனும் ... வந்த வழியைப் பார்த்துக்கிட்டு நடங்க, ஐயா.. ம்..." என்று வள்ளி கூச்சல் போட்டாள்.
வந்தவன் கம்பீரமாக முறுக்கு மீசையை ஒதுக்கி விட்ட வண்ணம். 'ஏலே வள்ளி, என்னை ஒனக்குத் தெரியலையா? நான்தான் பூவத்தகுடி மாப்பிள்ளை சிங் காரம். என்னைத் தெரியாதா ஒனக்கு? பிறக்கிற மாசம் நம்பரெண்டு பேருக்கும் தானுக்கும் கொட்டு மேளத் தோட கண்ணுலம். இப்போ புரிஞ்சுதா, இந்த ஆண் பிள்ளை வலிய ஒனக்கு உதவ வந்ததுக்குக் காரணம்...? நாடகத்துக்கு வந்தேன். நேரம் கிடக்குதேன்னு இப்பிடி வந்து மேடையிலே குந்தினப்போதான் நீ என் கண்ணிலே தட்டுப்பட்டே...தேடிப்போன தெய்வம் தேடி வந்தது கணக்கில்லையா...? என்று அவன் நாடகம் பாணியில் நடித்து பேசிய போக்கு வள்ளிக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.
அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன் றைக்கு திருமணம் பற்றித் தன் தந்தை சொன்ன வார்த்தைகளையும் அருகருகாக எண்ணிப்பார்த்தாள்.