இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
90
இந்தப் பயங்கரமான ராவணன் மீசைக்காரனுக்குத் தானு நான் வாழ்க்கைப்பட வேணும்? பயமாயிருக்குதே தெய்வமே, என்னேக் காப்பாத்து...! ஆளு எனக்கு மட்டும் அந்த நாடகக்கார மன்மத ராஜா கிடைச்சிட்டா அவருகூட எங்க இனமின்னுதானே காலம்பற கோவிந் தம்மா சொன்ன! சுகுமாரன் கிடைப்பாரா எனக்கு? என் நெஞ்சை யாருகிட்டே எப்படித் திறந்துகாட்ட முடியு மோ?...சாமி சுகுமாரனை என் நேசமச்சானுக்குவியா?...' என்று வள்ளியின் இன்பக் கனவு ஒர் இன்பலோகமாகப் பரிணமித்தது. அவள் மன சில் நாடகக்கார வாலிபன் கோவலஞகவும், அர்ஜானளுகவும், வேல் தாங்கும் முருகளுகவும் அழகு காட்டித் திகழ்ந்து கொண்டிருந் தான்...!
'வள்ளி, உன்னே இப்பக் கண்டது எனக்கு எம்மாம் சந்தோஷமா இருக்கு தெரியுமா? சமீபத்திலேதான் நாம் ரெண்டு பேரும் ஒண்னு கூடப் போருேமே... நாடகம் ஆரம்பிச்சிருவாங்க. ராஜபார்ட் சுகுமாரன் என் சேக்காளி. நான் பக்கத்திலே இல்லாப்போளு அப்புறம் அவனுக்கு பவுடர் போடவே கை ஓடாது. நான் போயிட்டு வாறேன்.'
மீசைக்காரனே கோபம் கனல் கக்கப் பார்த்தாள் வள்ளி. ஏளுே அப்படியே சிலையாகிப் போளுள். அவள் முகத்தில் நாணம் ரேகைவிட்டது__'ஆ!’
'எனக்கு ஒரு சின்ன ஒத்தாசை செய்யுநீங்களா? அந்த நாடகக்கார ஐயாகிட்டே இந்த பவுன் மோதி ரத்தை நீட்டிப்பிடுங்க, இது அவருடையது. ரொம்ப அவசரமுங்க. மறந்துவிடமாட்டீங்களே......' என்று சொல்லி, வள்ளி அந்த மோதிரத்தை அந்த ஆளிடம் நீட்டினுள். 'விசுக்கென்று' மோதிரத்தைப் பெற்றுக்