இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
91
91
கொண்ட அவன் ஒட்டமாக ஓடினன். வள்ளி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்த நடனமாடிக்கொண்டிருந்தாள்.
கோயில் மடத்திலிருந்து புறப்பட்டுப் பவனி வந்த வெள்ளி ரதத்தில் அம்பலவாணர் ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தார்.
மாசிமலைத் தேவர் வீட்டில் பெரிய மனிதர்களில் சிதம்பரத் தேவர், மணியக்காரர் மானிக்க அம்பலம், பஞ்சாயத்துப் போர்டு தலைவர் சுப்பையா செட்டியார், ஜில்லா போர்டு டாக்டர் பக்கிரிசாமி முதலியவர்கள் சந்தனம் பூசிக்கொண்டும், வெற்றிலை போட்டுக் கொண்டும் இருந்தார்கள். மேளமும் நாதஸ்வரமும் முழங்கியது.
'பரிசம்' போடப்பார்க்கிருர்கள்; வள்ளிக்கும் அந்த பூவத்தகுடி மாப்பிள்ளை சிங்காரத்துக்கும் கல்யாணம் அல்லவா?
மாப்பிள்ளை வீட்டார்கள் தங்கள் பிள்ளையைத் தேடினுர்கள். தாம்பூலம் மாற்ற.
மாசிமலைத் தேவர் தன் மகள் வள்ளியைத் தேடிக் கொண்டு கொல்லைத் தோட்டத்துக்கு வந்தார்.
என்ன அதிசயம் இது! அங்கு வள்ளியும் அந்த ராஜபார்ட் சுகுமாரனும் அல்லவா குலாவிக் குலாவிக் குஷாலாகப் பேசிக்கொண்டிருக்கிருர்கள்:
வள்ளி போன வருஷம் நாடகம் போடறதுக்கு வந்தப்போவே என்னைக் கண்டு விசாரிச்சு உங்கப்பா நம்பரெண்டு பேருக்கும் கண்ணுலம் கட்டிப்பிட வேணு மின்னு உறுதி சொன் ஞர். நாடகத்துக்கு ஒண்டிதான்.