இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
92
92
நான் சுகுமாரன்! மற்றபடி எனக்கு சிங்காரமின்னுதான் பேர். போன வருஷம் நீ என்னேக் கலாட்டா பண்ணத் தானே அப்படிச்செப்புச்சங்கிலியை தங்கச் சங்கிலின்னு ஏமாற்றினே... நானும் தெரிஞ்சுதானே உன் ஞாபகத் துக்கு அந்தச் சங்கிலியை வச்சுக்கிட்டு, என் ஞாபகத் துக்கு உங்கிட்டே என் அசல் பவுன் மோதிரத்தைத் தந்தேன். அதைத்தான் போன கிழமை நேருக்கு நேராக உன் கையாலேயே நானே வாங்கிக்கிட்டேனே! என்ன வள்ளி, அப்படியே சிலையாச் சமைஞ்சிட்டியே... ஒஹோ ராவணன் மீசைச்காரன் கிட்டே கொடுத் தாச்சே மோதிரம், இவன் நேருக்கு நேராக வாங்கிக் கிட்டதாகப் புளுகிருனேன்னுதானே யோசிக்கறே? அதுதான் ரகசியம்! உன்னை இப்படி ம்லைக்கச் செய்ய வேண்டியேதான், அன்னிக்கு மீசைக்காரளுட்டம் இந்தச் சிங்கம்தான் வந்தான்! உன் ஆசை முகத்தை நாளெல்லாம் பார்த்தாலும்தான் எனக்கு ஆசை தீராதே, வள்ளி எம் பேரிலே உனக்குள்ள ஆசையை கதைகதையாகச் சொல்லுவாள் உன் தோழி கோவிந்தம்மா. ஆளுல் இந்த முறுக்கு மீசைக்காரன் வேஷத்தை மட்டும் நீ ஒருநாளும் மறக்கமாட்டே யில்லையா? என்ருன் மாப்பிள்ளைப் பையன்.
'மச்சான், உங்கநாடகத்துக்கு என்னதும் ஒண்னும் சளைச்சதில்லே. நீங்கதான் அப்படி உருட்டு விழியோட உப்பின கன்னத்தோட, ராவணன் முறுக்கு மீசையோட வந்த துப்பை பாவம், உங்க மூஞ்சியிலேருந்துவிழுந்த !இந்த ஒட்டு மீசை காட்டிக் கொடுத்துப்பிடுச்சு மீசை உங்களை ஏமாத்தினதை நீங்க எங்கே கவனிச்சிருக்கப் போநீங்க? நீங்கதான் னு உண்மை புரிஞ்சதும்தானே, நானும் உடமைக்காரங்ககிட்டேயே பவுன்மோதிரத்தை தைரியமாகத் தந்துபுட்டேன். உங்களையே என் ஆசை