இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
103
" கெட்டவனைத் திருத்தும் அளவுக்கு அந்தக் குற்றங்கள் அவன் மனசை மாசு விலக்கிப் பக்குவமாக்கி, மனச்சாட்சியை விழிப்படையச்செய்து, அவனைப் புத்தம் புதிய மனிதனுக உருமாற__உள்ளம் மாறச் செய்து விடும் பட்சத்தில் அவன் புரிந்த தவறுகளை மன்னித்து, அந்தக் குற்றவாளியை நல்லவனுக ஏற்றுக் கையெடு த்துக் கும்பிடவும் செய்வேன்! ஆளுல் குற்றவாளி நிரந் தரக் குற்றவாளியாகவே காட்சி தருவானே யானல், அவன் உயிரை இந்தத் துப்பாக்கி முனைக்குப் பலியாக்கி விடுவேன்!”
வீறு கொண்டு முழங்கிளுன் அவன். அவன் கை துப்பாக்கியை லாகவமாகப் பற்றியிருந்தது. தட்சணமே விசையை இயக்கி முடுக்கிவிடுபவனுகத் தோன்றினன். வளர்த்த தெய்வமணிக்கரம் அவனுக்குச் சுய உணர் வைச் சொடுக்கி விட்டது.
"அப்பா!"
"சுசீந்தர்!"
"என்பதில் சரிவரப் பொருந்தவில்லையா?”
"நன்ருகச் சொன்னுயே!... உன் பதில் வெகு அற்புதம், போ! உன் மனத்தைப் படித்துக்கொள்ளத் தான் இப்படி ஒரு புதிர்ை உன் முன்னே வைத்தேன். வழிப் பயணத்துக்குப் பேச்சுத்துணை வேண்டாமா? அதற்குத்தான் என்னமோ கேட்டு வைத்தேன். அவ் வளவே தான்!” என்று அவர் சொன்னர்.
சுசீந்தருக்கு இப்போது சிரிப்பு வெடித்தது.