இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
106
என்று தன் வாயைக் கட்டிவிட்டு, தன் கண்களின் வாயைக் கட்டமுடியாமல் தவித்த__தடுமாறிய நாட்கள் ஒன்றிரண்டல்லவே?
"சுசி!”
இளைஞன் குரல் கொடுத்த சுவட்டிலேயே முதிய வளும் குரல் கொடுத்தாள்.
"தம்பி, நான் இந்த அம்மாவைத்தான் அழைத் தேன்," என்று புன்சிரிப்பில் பதிலைத் தூவிஞர் ரமேஷ் தாஸ்,
சுசீந்தர் ஓர் அரைக்கணம் நிலை தடுமாறிப்போளுகன்; அந்த அம்மணியை இமைக்காமல் பார்த்தான். மஞ்சளும் திலகமும் நிறக்க நின்ருள் அவள். தள்ளாமையின் முத்திரை ஆழப் பதிந்துவிட்டிருந்தது.
"சுசி"!
அவன் சும்மாயிருந்தான். அவள் 'என்னுங்க?'என்ருள்.
"நான் இப்போது கூப்பிட்டது தம்பியையாக்கும்!” என்று அவர் சிரித்தார். மூக்குக்கண்ணுடியைச் செம்மைப் படுத்திக்கொண்டார். சுசீந்தரைப் பார்த்தார்.
"அப்பா!"
அவனை அவர் நோக்கினர். அப்போது கலைமான் ஒன்று ஒட்டமாக ஓடி வந்து அவரிடம் அண்டியது.
"அப்பா எனக்கு ஒரு பரிசு தருவதாகக் குறிப்பிட் டீர்களே? இதுதான? நம் வீட்டுப் பிணைக்கு இணையான கலை இதுவோ?"