பக்கம்:இன்னமுதம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 49 களின் பற்றுக்கோடாய் உள்ளவனே! அடியார்கள் பலரும் போற்றுகின்ற பரம்பொருளே! பழையனூரை அடுத்துள்ள, திருவாலங்காட்டில் உறையும் தலைவனே! அடியேன் உன் அடியார்க்கு அடியனாக வாழ்வேன்” (முத்தா - கட்டுகளிலிருந்து நீங்கியவன்; சித்தா - சித்திகளைப் பெற்றவன்; தேவர் சிங்கமே தேவர்களுள் சிங்கம் போன்றவனே; பத்தா அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே; அத்தா - அப்பா பழையனூர் மேய ஆலங்காடு - திருவாலங் காட்டை அடுத்துள்ள பழையனூர் என்னுமிடம் வரலாற்றுப் பெருமையுடையதாகும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/51&oldid=747055" இலிருந்து மீள்விக்கப்பட்டது