பக்கம்:இன்னொரு உரிமை.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 சு. சமுத்திரம்

கிழவிக்குப் புரிந்தது. இப்போது, குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான் அவள் கவலை.

“குடிமவளக் கூட்டிக்கிட்டு வாம்மா...கணைக்கு மருந்து குடுக்கணும். சீக்கிரம்மா... நான் சொன்னேன்னு கையோடு கூட்டியா.”

மாமியாரின் உத்தரவிற்கு என்றுமே கீழ்ப்படியாத மருமகள், இப்போது “குடிமவளை” கூப்பிட ஒடிக்கொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/47&oldid=1388345" இலிருந்து மீள்விக்கப்பட்டது