பக்கம்:இன்னொரு உரிமை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 சு. சமுத்திரம்

 'சீல் வைக்கிறதுக்குக் கதவுகூட இல்லியே' என்று சொல்லப்போன சிதம்பரம், போலீஸ்காரர் உருட்டிய கண்களையும், லத்திக் கம்பையும் பார்த்து பயந்துவிட்டான். காசு கேட்கப்போனவன் கடன் கேட்கப் போனவனைப் போல் மிரண்டு பார்த்தான். போலீஸ்காரர் போய்விட்டார். நாளைக்குத்தான் வருவார். சிதம்பரம் தம்பியைப் பார்த்து 'சாயங்காலம் தோசைக்கு மாவு ஆட்டு" என்றான். பையன் அவனை முரண்பட பார்த்தபோது சிதம்பரமே ஒரு ஈயப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அரிசியை நனையப் போட்டான். போலீஸ்காரருக்கு தோசை போடவில்லை யானால், அவர் அவனை போட வேண்டிய இடத்தில் போட்டுவிட்டால்-தோசையைப் புரட்டுவது மாதிரி...

எவரும் அங்கே வந்து சாராயம் குடித்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை தனக்குத் தெரியாமலே யாரும் போட்டிருக்கலாமோ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது. சைக்கிள் மணி அடித்தது. மணியோசையுடன் சிதம்பரம்...சிதம்பரம்... ஒன்னத் தாண்டா... என்று குரல். காட்டிலாக. அதிகாரி ஒருவர் சைக்கிள் பிடலை விட்டு காலை எடுக்காமலே, ஹாண்ட்பாருக்கும் சீட்டுக்கும் இடையே உடம்பைக் கொண்டுவந்து நிறுத்திக் கொண்டு, 'ஒரு கலர் எடுத்தா. கூடவே கொரிக்கதுக்கு ஒரு மசால்வடயும் எடு' என்றார். கடையில் உட்கார்ந்திருந்த ஒரு வாடிக்கைச் சிறுவன், 'கேட்டது ஓசி. இதுல வேற அதிகாரம்' என்று சத்தம் போட்டே பேசினான். காட்டிலாக் காக்காரர் அவன் சொன்னது கேட்டது போல் நிமிர்ந்தார்.

சிதம்பரத்திற்கும் எரிச்சலுக்கு மேல் எரிச்சல். 'இங்கே வந்து குடியேண்டா பிச்சைக்காரா' என்று மனதுக்குள்ளே அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது, அதிகாரி 'ஏய்! நான் சொல்றது காதுல விழல!' என்றார். சிதம்பரம் ஒரு கலர் பாட்டலை எடுத்துக்கொண்டே, பிச்சைக்காரன் மாதிரி ஓடினான். அதிகாரி அந்தக் கலர் பாட்டலை காலி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/65&oldid=1388606" இலிருந்து மீள்விக்கப்பட்டது