பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருகும் பிரிவுத்துயர்

41

 தாழைப் புதரில் தனித்துறங்கும் பெட்டையினை ஆழக் கடல்தாண்டி அணயவரும் நீள்நாரை!
தாழைச் சலசலப்பும் தலதாழ்த்தும் வெய்யோனும் ஏழை எனவாட்டும்; இடர்களேய வாராரோ?

அதோகேள்!

 கோயில் மணியும் குரலெழுப்பி ஓய்ந்ததடி! வாயில் விளக்கை வளைக்கைகள் ஏற்ற - அருகிலிருந்து பூநுகரும் ஆளன் பெருந்தோளே இருகையால் தாவும் எழில்மகளிர் கண்டே பெருகும் பிரிவுத் துயர்!