பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAS A SAS SSASAMAAAS AAAAA SAAAAA MAAA AAAAS A SAAASA SAASAASAASAASAAAS

இன்ப மலே

SMMSMSMSMSMSASAASAASAASAASAASAAASMMMS SSSSSS

கிறது. அங்கே தலைவனே அவள் மலை நாட்டையுடையவனே என்று விளிக்கிருள். சுருக்கமாக மலே நாட என்று சொல்லி விடாமல் அந்த மலையின் வளப்பத்தை எடுத்துரைக் கிருள். பதினெட்டு அடிகளைக் கொண்ட இந்தப் பாட்டில் முதல் ஒன்பது அடிகளும் மலேப் பக்கத்தில் உள்ள எழிலே அழகாக எடுத்துக் காட்டுகின்றன. வாழை மரங்கள் பெரிய குல்ேகள் ஈன்று கிற்பதையும், அவற்றின் காய்கள் கனிந்து உதிர்வதையும், பலா மரத்திலே பழம் கனிந்து வெடித்து வழியிலே போகிறவர்களே யெல்லாம் அவர்கள் போகிற போக்கிலே போக விடாமல் தடுப்பதையும், தேன் சொரிந்த சுனேயில் அத் தேன் புளித்து விளைதலேயும், வாழைப் பழத்தையும் பலாப் பழத்தையும் வயிறு நிறைய உண்ட ஆண் குரங்கு மரத்திலே ஏறுவதற்கு முடியாமல் உகிர்ந்த மலர் குவியலாகக் கிடக்கும் மெத்தென்ற படுக்கை யிலே தூங்குவதையும் அந்தப் பகுதியிலே பார்க்கிருேம். குறிஞ்சி நிலத்தின் எழிலேயும் இன் பத்தையும் அந்த ஒன்பது அடிகள் காட்டுகின்றன. நாம் மலேச் சாரலிலே கிற்பது போன்ற உணர்ச்சி உண்டாகிறது. வாழைப் பழமும் பலாப் பழமும் தேனும் அகக் கண் முன் வந்து நம் காவிலே நீரூறச் செய்கின்றன. அந்தக் குரங்கு பெற்ற சுகமே சுகம்' என்று மனசுக்குள் சொல்லிக்கொள்கிருேம். இது குறிஞ்சி நிலத்தின் இன்பக் காட்சி.

மற்றெரு பாட்டில் பயங்கரமான மலைக் காட்சிகள் வருகின்றன. பாகி ராத்திரியில் அந்த மலையில் புலவர் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிரு.ர். இதில் உள்ள நான்காவது பாட்டில் இரும் மலேச் சாரலில் இரவில் பயங் கரம் தாண்டவமாடுவதைக் காண்கிருேம். பதினெட்டு வரியி லுள்ள அந்தப் பாட்டில் பன்னிரண்டு அடிகளில் அச்சக் சுவை ததும்பும் வருண&னயைப் புலவர் அமைத்திருக்கிரு.ர். ஈசல் கிறைந்த புற்றிலே புற்றஞ்சோற்றைத் தின்ன வந்த

12