பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMJJMAMMAAAMMMMASJJMMSJAMAMMJSMAJ

இன்ப மலே

தோழி மிக்க அறிவுடையவள். வீட்டில் வந்து சந்திப்பதை எளிதென்று இவன் கினைக் கக்கூடாது. அதில் உள்ள இடர்களையும் தெரி விக்கவேண்டும். ஆனல் அதைக் குறிப்பாகவே தெரிவிக்கவேண்டும் என்று எண்ணினுள்.

" இரவுக் காலத்தில் வந்து காணலாம்: தலைவியினுடைய தந்தை இரவிலே வீட்டையும் - ஊரையும் காவல் காப்பதற்காகக் காவலரை வைத்திருக்கிருர். அவர்களுடைய கட்டுக் காவ லேக் கடப்பது எளிதன்று; கடப்பதற்கரிய அருங்கடிக் காவலர்: அவர்கள். அவர்கள் சோர்ந்திருக்கும் சமயத்தை அறிந்துகொண்டு தாங்கள் வரவேண்டும். அவ்வாறு வந்தால் இரவில் வருவதற்கும் உரியவர்கள் ஆவீர்கள்.'

தலைவன் இப்போது சிந்தனையில் ஆழ்ந் தான். இரவிலே காவலருடைய காவலேக் கடந்து செல்வது எப்படி என்ற ஆராய்ச்சி யிலே இறங்கினன். தலைவியை இதுகாறும் எளிதிலே கண்டு அளவளாவிய மாதிரி இனிக் காண முடியாதோ என்று ஏங்கினன். அவன் மனம் தத்தளித்தது. அவன் உள்ளத்தே


-....م. مم.-..ر. مر-.-.

தோன்றிய துயர்த்தை அவன் விட்ட பெரு மூச்சு வெளிப்படுத்தியது.

  • கடி - காவல்,

56