பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMSMMJeAeMMAMSAMSAMAMSAMMMMAJMMMAMSMMSMMSMMSMSMSMAMAeeMAMAAAS

இன்ப மலே

AMAASAAAAS AAAAAeMSAASAASAASAASAASAA AA ASASASA AAA AAAAMAMASAMSMJSAMAAA AAAA SAAAAA AAASA SAJAAA AAAASAASAASAASAASAASAASAASAASAASAAMAAASA SAASAASSAAAAA AMSMMAAAA

தோழி அவன் நிலையை உணர்ந்தாள். தான் எதை உணர்த்த வேண்டுமென்று எண்ணினளோ, அதை உணர்த்த இதுவே சமயம் என்று அறிந்து குறிப்பாகச் சொல்லத் தொடங்கினுள். - தந்தை வைத்திருக்கும் காவலர் சோரும்" نانس பதத்தை (சக்கர்ப்பத்தை)அறிந்து கங்குலில்வருதலும் தங்களுக்கு உரியதே என்று சொன்னேன். காவலர் காவலின் கடுமையை எம்பெருமான் நினைத்துப் பார்க்கிறதாகத் தோன்றுகிறது. குறித்த இன்பத்தை எளிதிலே பெற வேறு சிறந்த வழியும் உண்டு ' என்று தலைவன் கவ னத்தைச் சிறிதே தன் பக்கத்தில் திருப்பினள்.

' வேறு வழி என்ன ?' என்று அவன் ஆவலோடு கேட்டான்.

'பசிய கொடிகளுக்கு இடையே கிற்கும் இந்த வேங்கை மரம் அதைச் சொல்லாமற் சொல்கிறதே !'

எதைச் சொல்கிறது ?”

' ஒரேயடியாகப் பூத்துக் குலுங்கும் இந்த வேங்கையைக் காணும்போதெல்லாம் எனக்கு மண வீடு நினைவுக்கு வருகிறது. அலங்காரம் செய்த மணவீடும் அணி செய்த மணமகளும் போல ஒள்ளிய பூங்தொத்துக்கள் மலர்ந்து விளங்குகிறது. இந்த வேங்கை மரம். இதைக்

57