பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAAASHMMAMSJSJSAASAASAAAS @ia ಒ ..-.... .يي سمير ميم..م.... هم...-....-.......-...م

கண்டு குறிஞ்சி நில மக்கள் தங்கள் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய முயல் வார்கள். மாலை கேரத்தில் திங்கள் தோன்றி ல்ை அதைச் சுற்றி இந்த மாதத்தில் கோட்டை கட்டியிருப்பதைக் காணலாம். அந்தப் பரிவேட மும் இது கல்யாண காலம் என்பதைத் தெரி. விக்குமே! விலங்குகள்கூட எதிர்பாராக இன் பத்தை அடையும் காட்டுக்குத் தலைவராகிய தாங்கள், எதிர்பார்த்த இன்பத்தை அடைய வழியா இல்லை ? கங்களுக்கு அரியதென்ற செயலும் உண்டா ? எதுவானுலும் விரைவில் ஆராய்ந்து முடிவுகட்டிச் செய்யவேண்டும். தலைவியின் உள்ளம் படும் பாடு எனக்குத் தெரி யும். அவள் இன்புற வழி பிறக்கவேண்டும்.'

இப்படி அவள் சொல்லச் சொல்லத் தலைவ லுக்கு, இனி கம் காதலியை முறைப்படியே திருமணம் செய்து கொள்வதுதான் ஏற்றவழி: என்ற உறுதி உண்டாயிற்று. - தலைவன் பகலிலே தலைவியைச் சந்திக்கும் பகற் குறிக்கண் வந்தபொழுது, அவனுக்குத் தலைவியின் தாய் தலைவியை இல்லிலே இருக்க வைக்கும் செறிப்பை அறிவுறுத்தி, அவன் திருமணம் செய்து கொள்வதற்குரிய முயற்சி யிலே முனையும்படியாகத் தோழி சொல்வதாக அமைந்திருக்கிறது பாட்டு.

58