பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAMAJMAMAMMMAMAAA AAAA AAAA AAAA AAAAJM AMAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SASAAASAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS A SASAASAAAS

இன்ப மலை

MAAMMAMMSMSAMASAMeAAASAASAASAASAASAASAAASAAA SS AASAASAASAASAASAASAASAA AA ASASASJSJA AAAASSAAAAA ASASASA AAA AAAA AAAA AAAAA

ந்தக் கார்காலத்தை எதிர்நோக்கி யிருந் தாள் ஒரு காதலி. இல்வாழ்விற்கு வேண்டிய பொருளே ஈட்டும் பொருட்டு அவளுடைய காத லன் வேறு ஊருக்குச் சென்ருன். ' கார் காலத் தில் வந்துவிடுவேன்' என்று உறுதிமொழி கூறி அகன்றன். காதலி இல்லற வாழ்வில் செய்தற் குரிய கட்மைகளே நன்கு நிறைவேற்றுகிறவள். அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் எவ்வ ளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்த வள். தன் காதலனைச் சிலகாலம் பிரிந்திருக்க சேர்ந்தாலும், அந்தப் பிரிவு பின்னல் மிகுதி யான பயனேத் தருவதற்கு ஏதுவாக இருப்ப தைத் தெளிந்து, அவன் செல்வதைத் தடுக்க வில்லை. தனக்கும் பிரிவினல் துன்பம் உண்டா லுைம் அறத்தைக் கருதிப் பொறுத்திருக்க வேண்டும் என்று எண்ணினுள்.

அவன் பிரிந்து சென்ற பிறகுதான் பிரி வின் துன்பம் அவளுக்கு அநுபவத்தில் தெரிய வந்தது. ஆயினும் கடமையை உணர்ந்து அதை வெளிப்படுத்தாமல் பொறுத்து ஆற்றிக்கொண் டிருந்தாள்.கற்புடைய மகளிர்இவ்வாறு தம் கண வர் பிரிந்த காலத்தில் கடமையுணர்ச்சியோடு வீட்டிலே இருந்து வாழ்வதுவே முல்லைகிலத்துக் குரிய நிகழ்ச்சி. அதை முல்லைத் திணேயின்

உரிப்பொருள் என்று புலவர்கள் சொல்வார்கள்.

70