பக்கம்:இன்ப வாழ்வு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இன்ப வாழ்வு


கனிவாய் இன்பத்துக்கு ஓர் உவமை கூற இவ்வளவு திண்டாட்டமா? திணறலா? திக்குமுக்காடலா? அவன் - அக்கனிவாய் இன்பினை நுகர்ந்தவன் ஏதேனும் உவமை கூறியிருக்கின்றானா? ஆம், கூறியிருக்கின்றான். ஒன்றன் சிறப்பை உணர்த்துதற்கு உவமை கூறுவதென்றால் அதனின் சிறந்த பொருளை எடுத்துக் கூறுதல்தானே மரபு? நன்கு சுடர்விடும் விளக்கு ஒன்றிற்கு மின்மினியையா ஒப்பிடுவது? கதிரவனைப்போல் ஒளிர்கிறது இவ்விளக்கு, எனல்தானே உவமையியல்?

ஆயினும், கனிவாய் இன்பத்துக்கு அவன் என்ன உவமை - ஒப்புமை கூறியுள்ளான்? தமிழர்களே, நம்பு வீர்களா? அன்றைய தமிழன் தன் பட்டறிவிற்கு எட்டி யதைச் சொன்னான். ஆனால் இன்றைய தமிழனோ, அதனைப் புரிந்துகொள்ளும் நிலையில்- நம்பக்கூடிய நிலையில், தன்னுணர்ச்சி உடையவனாய்-தன்னம்பிக்கை உடையவனாய் இல்லை. அந்தோ தமிழகமே! நீ அளியை! நீ நல்லை! நீ வாழ்க!

அவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறான்? என்ன உவமை கூறியிருக்கிறான்? தேருந்தோறும் தேருந்தோறும்ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிக்கின்ற செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் இனிக்கிறது; ஆருந்தோறும் அமிழ்தாகின்றது - என்பதுதான் அவன் செம்மொழி.

இப் பொருள் செறிந்த உவமையில் எத்துணை உண்மை பொதிந்து கிடக்கின்றது. இக் கருத்து, எத்துணை ஆழமுடையது. எத்துணை அகலமுடையது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/31&oldid=550761" இலிருந்து மீள்விக்கப்பட்டது