பக்கம்:இன்ப வாழ்வு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பின் பதிப்புரை

பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் 'தைத்திங்கள்? நூலின் மதிப்புரை புதுச்சேரி புலவர் மு. இறைவிழியனார் நடத்தும் நற்றமிழ்’ இதழில் வெளியாகியிருந்தது இதைக் கண்ணுற்ற பரமக்குடி அன்பர் திரு. பா. சரவணக் குமார் அவர்கள் ஒரு படி கேட்டு எழுதியிருந்தார். நூலும் அனுப்பி வைக்கப்பட்டது நூலைப் படித்து அதன் சிறப்பைப் பாராட்டி எழுதியிருந்த கடிதத்தில் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் தமிழ் இலத்தீன் பாலம்', உலகு உய்ய', மற்றும் 'இன்ப வாழ்வு முதலிய நூல்களைப் புகழ்ந்து எழுதியிருந்தார். 'இன்ப வாழ்வு' பற்றி அவர் எழுகியிருந்தது வருமாறு: "இக்கால இளைஞர்கள் பாலியல்-பாலுறவு பற்றிய மித மிஞ்சிய கற்பனையில் ஒரு விதமான தவறான போக்கில் உள்ளனர். ஆதலால் பேராசிரியர் எழுதிய 'இன்ப வாழ்வு’ என்ற பாலியல்பாலுறவு வாழ்க்கைப் பகுதியை விளகுக்ம் நூலை மறுபதிப்புச் செய்து வெளியிட்டால் நலம் விளையும்.”

புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் பிரெஞ்சு தமிழ் ஆய்வு மாமணி', 'சிறுவர் மனச் செம்மல்", உயர்திரு க. சச்சிதானந்தம் அவர்கள் பேராசிரியர் சுந்தர சண்முக னாரின் நூல்களை ஆண்டுக்கொன்றாக வெளிக்கொணரும் அரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறே வீடும் விளக்கும்’, மற்றும் 'தைத்திங்கள்’ நூல்களைக் கடந்த இரு ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ஆண்டு எந்த நூலை வெளியிடலாம் என்று எங்களை அணுகிய போது உயர்திரு சரவணக்குமார் கடிதம் பற்றி கூறப்பட்டது. உடனே இன்ப வாழ்வு நூலினையே இவ்வாண்டு வெளியீடாகச் செய்து விடலாம் என்று கூறி அவ்வாறே வெளியிட்டுள்ளார்கள். இது தான் பேராசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/6&oldid=550792" இலிருந்து மீள்விக்கப்பட்டது