பக்கம்:இன்ப வாழ்வு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இன்ப வாழ்வு


கொஞ்சுகிறதாமே கெஞ்சுகிறதாமே! நானாக விரும்பியும், குற்றாலநாதர் என்னை வந்து கூடமாட்டேன் என்கிறாரே! என்று ஏங்கும்படியாக, அவளைக் குத்திக்காட்டுவதுபோல இருக்கின்றதல்லவா இந்தப்பாட்டு:

மேலும் குறவஞ்சி கூறுகின்றாள்: “கிழங்கு கிள்ளித் தேன்.எடுத்து வளம்பாடி நடிப்போம்

கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பக்தடிக்கும் தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்’

தெரியதா அம்மே!

வல்லி: ஊம் தெரிகிறது தெரிகிறது. சரி உன் மலையின் வளப்பத்தைப் பாடுகின்றாயே, அம்மலையின் பெயரைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!

குறத்தி: ஓகோ மலையின் பெயரா? இதோ சொல்லு கிறேன். அம்மே!

கனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே” எங்கள் மலை குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திரிகூட மலை அம்மே என்று கூறினாள்.

ஒகோ அப்படியா என்று பெருமுச்சு விடுகிறாள் வல்லி. அல்வாவின்மேல் ஆவல் கொண்டிருக்கும் சிறுவனிடம், அல்வாவைப்பற்றியும், அது இருக்கும் இடத்தைப்பற்றியும் சொன்னால் எப்படி இருக்கும்? துடிக்காதா மனம்? அதே நிலை தான் இப்போது வந்த வல்லிக்கும். “சரி உன் இருப்பிடம் குற்றாலமலை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/85&oldid=550816" இலிருந்து மீள்விக்கப்பட்டது