புலவர் சுந்தர சண்முகனார்
87
‘நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலில் செங்கெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து’
தெரியுமா அம்மே! என்றாள்.
ஓர் ஆண்டுக்கும் மூன்று மழை காணமுடியாத நமக்குத் திங்கள் மூன்று மழை பெய்ததாக ஏட்டிலாயினும் கண்டு இன்புறும் வாய்ப்புக் கிடைத்ததே இந்நாடகத்தால்!
இந்த விதமாகக் குறவஞ்சி மலைவளம், நாட்டுவளம், ஊர் வளம் கூறிக் குற்றாலநாதரின் சிறப்பையும் சிறிது செப்பினாள். கேட்டுப் பதைபதைக்கும் வசந்தவல்லி, “ஏ நங்காய்! நீ நன்றாகக் குறி சொல்லுவாயா’ என்றாள், உடனே குறவஞ்சி ‘ஒ அம்மே! பாரம்மே! மதுரையில் மீனாட்சியின் மணத்திற்குக் குறி சொல்லியவர்களும் எங்கள் குலத்தார்களே! நானும் அப்படித்தான்!
“ வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடக் துலுக்கான மெச்சி செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரை தென் மங்கலப் பேட்டை மிஞ்சு குறி சொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற விருதுகள் பாராய்”