பக்கம்:இன்ப வாழ்வு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

93


சிங்கன் குற்றால நாதரை வேண்டிக்கொண்டேன்; அவர் கூட்டி வைத்தாரடி சிங்கி.

சிங்கி: அப்படியென்றால் அவரைக் குறித்து ஆடுவோமே - பள்ளு பாடுவோமே சிங்கா!

சிங்கன்: ஆடுவது யார்? பாடுவது யார் சிங்கி?

சிங்கி - நீ இறைவனைப் பற்றி இசையாகப் பாடு. நான் அதற்கேற்ப ஆடுகிறேன் சிங்கா.

சிங்கன்! நீ ஆடுவதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்காதடி சிங்கி.

சிங்கி:- ஏன் சிங்கா? எனக்கு உடம்பு நோகும் என்றா?

சிங்கன்:- இல்லை இல்லை! ஆட ஆட உன் மேல் ஆவல் பிறந்து விடுமடி சிங்கி.

சிங்கி:- சே! சே! கடவுளைக் குறித்து நீ பாட அதற் கேற்ப நான் ஆடும்போது என்னைக் கடவுளாகவே எண்ண வேண்டும். பொருளறிந்து ஆட்ட பாட்டங்களைச் சுவைக்க வேண்டும். ஆடுபவரையும் பாடுபவரையும் பார்த்துச் சுவைக்கக் கூடாது. தெரிகிறதா? ஊம், பாடு. நான் ஆடுகிறேன்.

கணிர் கணிர் என்று சிங்கன் பாடினான். கலீர் கலீரென்று சிங்கி ஆடினாள். இருவரும் இறைவனின் இணையற்ற பேரின்பத்தில் முழ்கித் தம்மை மறந்து திளைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/94&oldid=550825" இலிருந்து மீள்விக்கப்பட்டது