பக்கம்:இன்றும் இனியும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi பெருங்கோட்டை எழுப்பியதுண்டு. ஆனால், அத்துணைப் பெருங்கோட்டைக்கும் அடிப்படையாக வுள்ள கடைகாலே இங்கே ஆட்டங் காணுகின்றது (14). கடைகாலே அதிரும்போது, அதன்மேலெழுந்த கோட்டையைப் பற்றி என்ன சொல்ல; இலக்கியத் திறனாய்வின் நக்கீரராகவுள்ள பேராசிரியர் அ.சஞா. அவர்கள் வரலாற்று ஆராய்ச்சியிலும் தம் திறன் நாட்டும் தகுதிப் பாட்டினை இக் கட்டுரையில் காணலாம். ஐந்தாம்பத்துப் பாடல்களிலும் இங்ங்ணம் பல அழகுகளைக் காண்டல் கூடும். (இவ் அங்கதத் தீர்ப்பின் 'உம்' என்பதன் உண்மையை முடிவு செய்ய ப. 158ல் உள்ள பட்டியல் உதவும்) х "உலகில் ஒரு மூலையில், தமிழ்நாட்டில், என்றோ ஒருநாள் தோன்றிய ஒரு நூலை, உலகப் பொதுமறை என்று கூறல் பொருந்துமா? இவ்வாறு கூறுவது உண்மை வழக்கா? அன்றி, உபசார வழக்கா?" என்று. வினா எழுப்பி, 'காய்தல் உவத்தல் இன்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவு காண்பது ஒரு கட்டுரை (ர. இலக்கியத்தின் நற்பண்புகளையும், அதனைப் பயிலவும் சுவைக்கவும் வேண்டிய முறைகளையும், "பொய்யாய நாகரிகத்தே புக்கழுந்தி நாடோறும் உய்வழியின்றி வருந்துந் தமிழர்க்கு என்றுங் கலங்கரை விளக்காய் நின்று உதவுவது" ஆகிய புறநானூற்றின் வாயிலாகப் புலப்படுத்துவது ஒரு கட்டுரை (15). 必 அறிவுவழிப் புகழ் எது? உணர்வுவழிப் புகழ் எது? இவற்றில் எது சிறந்தது: இந்த வினர்க்க்ளுக்கு'வின்ட தருவது ஒரு கட்டுரை (5) பட்டிமண்டபப் பாங்குக்கு