பக்கம்:இன்றும் இனியும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix உவமைகளைக் கையாளுவதுண்டு. காரணத்தோடு செய்யும் இம்மாறுபாட்டை இக் கட்டுரையின் பிற்பகுதி நன்கு விளக்குகின்றது. ஈற்றில் உள்ள கட்டுரை இவர்தம் எண்ணத்தின் ஆற்றல் மனத்தை ஒருமுகப் படுத்தினால், தூய எண்ணங்களை, அதில் நிரப்பினால் பெறும் பயன்கள் f_{(3)} STGÖTLİ {TFT. செயற்கரிய செய்வார் பெரியோர் என்றது இத்தகு எண்ணங்களின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வையத்தை வாழவைக்கும் சான்றோரையே குறிக்கும் என்பது தேற்றம். * - கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்து முடித்த பின் தோன்றும் கருத்து: என்றோ தோன்றிய தமிழ் இலக்கியத்தின் முக்காலப் பரப்பையும் அறிவொடு முரணாத உயர்வொடு பொருந்திக் கண்டு களித்தோம்; களிப்பொடு தெளிவும் பெற்றோம். "சென்ற காலத்தில் பழுதிலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந்தருளப் பெற்ற பேறு" எனச் சேக்கிழார் திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகின்றார். திரு. ஞானசம்பந்தர் உருவாக்கிய இந்த நூலின் கருப்பொருளுக்கும் அந்தச் சேக்கிழார் அறிமுகம் பொருந்தும். -