பக்கம்:இன்றும் இனியும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை 127 யவர்கள் கருதினார்கள். மொழி நூல் நன்கு வளர்ந்துள்ள இக் கால அறிஞர்கள் வேதத்தினுள்ளும் கூடச் சில திராவிடச் சொற்கள் புகுந்துள்ளன என்றும், கிரேக்க மொழியிலும் சில தமிழ்ச் சொற்கள் புகுந்துள்ளன என்றும் கூறுகின்றனர். பதிப்பு வேலை போக ஆராய்ச்சி நூல்களாக 23 நூல்கள் யாத்துள்ளார். இவற்றுள் இரண்டு ஆங்கிலத்திலுள்ளன. இன்னும் இவர் எழுதி வெளிவராத கட்டுரைகளும் பல உள. இவர் சேர்த்து வைத்திருந்த பன்னூறு ஏட்டுச் சுவடிகளும் நூல்களும் இன்று தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் பேறு நமக்கு இல்லை. கல்கத்தாவிலுள்ள தேசீய நூல் நிலையத்தில் அவை இருக்கின்றன. அந்த ஏடுகள் நூல்கள் ஆகிய வற்றிற்கு அவர்கள் ஒரு நூற்பட்டியல் வெளியிடுவார் களாயின் பெரிதும் பயனுடையதாயிருக்கும். இறுதியாக ஒரு வார்த்தை திரு. பிள்ளையவர்கள் r இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் வகுத்த வழிகளும் அவர் இயற்றிய நூல்களும் உள்ளன. அவர் முடிபுகளை உடன்படாதவர்களும் அவர் வகுத்த புது வழியைக் கண்டு வியவாமல் இருக்க முடியாது. தமிழாராய்ச்சியில் விஞ்ஞான முறையைப் புகுத்திய பெருமை திரு. பிள்ளையவர்களையே சாரும். அந்த ஒரு வழியில் சென்றால்தான் உண்மை காண முடியும். காய்தல் உவத்தல் அகற்றி அவர்வழிச் சென்று உண்மை காண முயல்வதுதான், தமிழர்கள்ாகிய நாம் நம் முன்னோடியான அந்த விஞ்ஞான முறைச் செல்வருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாம்.