பக்கம்:இன்றும் இனியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 3 அடிக்கடி காணும் பொருள்களின் தனிச்சிறப்பை விளங்கிக்கொள்ளவும் உவமையைப் புலவன் கையாள்கிறான். ஆகவேதான், அவனுடைய புலமைச் சிறப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது என்று சொல்கிறோம். தருமம் என்ற ஒன்றைப்பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். என்றாலும், நுண்ணிய கருத்துப் பொருளாகிய அதைப்பற்றி நன்கு மனத்தில் வாங்கிக் கொள்ளுவதும் அதனை விளங்கிக் கொள்வதும் கடினம்ாகும். சந்திரனை நாம் அனைவரும் கண்டுள்ளோம். நிர்மலமான ஆகாயத்தில் முழுச் சந்திரன் புறப்படும்பொழுது நம்முடைய கவனத்தைப் பற்றி ஈர்க்கின்றது. என்றாலும், இருளைக் கிழித்துக் கொண்டு புறப்படுகின்ற இந்தச் சந்திரன், நம் வாழ்வில் பலமுறை கண்ட இச் சந்திரன், நம்முடைய கற்பனையில் மட்டும் காட்சி அளிக்கின்ற தருமத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கவிஞன் செய்கிறான். தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனி வெண் திங்கள்' என்று கம்பநாடன் கூறும் பொழுது, இதுவரையில் நம்முடைய கற்பனையில், அக மனத்தில் மட்டுமே அறியப்பெற்ற தரும்ம், திடீரென்று முழுவடிவும் ஒளியும் பெற்று நம் கண் எதிரே காட்சி அளிக்கின்றது. இத்தகைய ஒரு பயனை - அதாவது கருத்தில் மட்டும் அறிந்த ஒன்றைக் கட்புலனுக்கும் எளிதாகக் கொண்டு வந்த புதுமையை கவிஞன் உவமையால் செய்துவிடுகிறான். சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமன் என்று, கவிஞன் குறிப்பிடும் பொழுது தாமரைக்கு இல்லாத ஒரு சிறப்பை அதாவது சிரிக்கின்ற இயல்பை அத் தாமரையினிடம் ஏற்றி, அதனை நம்முடைய உள்ளத்திற் புகுத்திய பிறகு