பக்கம்:இன்றும் இனியும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இன்றும் இனியும் ஆசிரியத் தொழிலை விட்டுப் போய்விட்டேன்; ஒரு தினுசாக முற்றிலும் விடைபெற்றுக் கொண்டேன். என்றாலும் பூ.சா.கோ. கல்லூரித் தலைவர் என்னை விட்டடாடில்லை. இரண்டு ஆண்டுகளிலே எவ்வளவு மறக்க முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கின்றேன். எதனைக் கேட்டாலும் எனக்கு இப்பொழுது புதுமையாக இருக்கின்றது. அந்தச் சூழ்நிலையிலே எதற்காக இங்கு என்னை அழைத்து உங்கள் முன்னர் நாடகம் ஆடவிட்டார் உங்கள் கல்லூரி முதல்வர் என்பது விளங்கவில்லை. என்றாலும் என்மாட்டு அவர்கள் கொண்டிருக்கின்ற அன்பை நன்கு அறிவேனாதலால் அந்த அன்பிற்குக் கட்டுப்பட்டு இங்கே நிற்கின்றேனே தவிர வேறு ஒன்றுமில்லை. கல்லூரி ஆசிரியனாக இருக்கின்றவரையிலாவது அன்றாடம் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டு என்னுடைய அறிவை மழுங்கவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பமுன்டு. இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, என்னுடைய விடைகள் அவ்வளவு பொருத்தமுடையனவாக, அனைவரும் - அனைவரும் என்பது முடியாத காரியம் - மிகப் பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த