பக்கம்:இன்றும் இனியும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 219 இவ்வளவு அவசரத்திலே நம் நாகரிகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதில் ஏதாவது அந்தப் பழைய வாழ்க்கை முறை செல்லுபடியாகுமா? ஆகவே, அந்த வாழ்க்கையைத் திருப்பிக் கொண்டுவர வேண்டுமென்றால், அவை எல்லாம் நடவாத காரியம். அந்த வாழ்க்கை முறை தேவையுமில்லை. ஆனால், அந்த மனநிலையை விட்டுவிடாதீர்கள். குறிஞ்சி நிலத்துக்காரனாகட்டும், முல்லை நிலத்துக்கார னாகட்டும், நெய்தல் நிலத்துக்காரனாகட்டும் அவனுக்கு என்று வெவ்வேறு வாழ்க்கை முறை வகுத்திருந்தாலும் அடிப்படையான ஒரு பொதுப் பண்பாட்டைப் பெற்றிருந்தான். இப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு, அனைவர்க்கும் பொதுவாகும். கருதலா மெனில், செயல் திட்டம் என்னவென்கிறீர்கள். கருதத் தான் இல்லையே; அப்புறம் செயல் திட்டம் எங்கு? அந்த வாழ்க்கை முறை தேவை இல்லை. அந்த மனோ நிலை மட்டும் தேவை. அந்த வாழ்க்கை முறை வேண்டா, ஆனால், அந்தப் பண்பாடு தேவை - அதனுடைய சாரமாக இருந்ததே உயர்ந்த குறிக்கோள்கள் - 'அமிழ்தம் இயைவதெனினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலர்', 'எலி போன்றவர்களுடைய நட்பே வேண்டா. புலி போன்றவர்களுடைய கேண்மை நாளும் உளவாகட்டும், (புறம் 190) என்று பாடினானே. அந்தக் குறிக்கோள் வேண்டுமே தவிர, அந்த வாழ்க்கை முறை தேவை இல்லை. முற்பட்ட காலத்தில் நிலவிய வாழ்க்கை முறைகள் தேவை இல்லை. வாழ்க்கை அனுபவங்கள் - வாழ்க்கையின் குறிக்கோள்கள் - வாழ்க்கையில் கண்ட உண்மைகள் ஆகியவை நமக்கு