பக்கம்:இன்றும் இனியும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 'இன்றும் இனியும் என்ற இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பேயாகும். பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளும் ஒரு வானொலிப் பேச்சும் இத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. 'இன்றும் னியும் என்ற தலைப்புடன் வெளிவரும் பகுதி சற்றுப் புதுமையானது. அது கட்டுரையாக எழுதப்பெறவில்லை. பூ.சா.கோ. கலைக் கல்லூரி மாணவர் புதிய முறையில் தமிழ் விழாவைக் கொண்டாட நினைத்தனர். சங்ககாலம்', 'இடைக் காலம்', 'இன்றும் இனியும் என்ற மூன்று தலைப்பு களில் ஒவ்வொன்றிலும் இருபது வினாக்களை எழுப்பி மூவர்க்கு அனுப்பினர். அதில் மூன்றாவது தலைப்பை எனக்கு வழங்கினர். எழுத்திற்கும் பேச்சிற்கும் அப்படியே ஒலிப்பதிவு செய்து எழுதியதாகலின் நடையில் ஓரளவு மாறுபாடு இருக்கத்தான் செய்யும். என்றாலும், பல ஆண்டுகளின் முன்னர் இந் நூலாசிரியன் இதில் எழுப்பப்பெற்ற வினாக்கட்கு எத்தகைய விடை தந்தான் என்று அறிவதற்கு இது வாய்ப்பளிக்கும். பெரும்பான்மையான அளவில் இன்றும் இதில் மாறுபாடு நினைப்பதற்கு ஒன்று மில்லை எனினும் ஒரு சில இடங்களில் இன்றைய நிலையில் என் கருத்தில் ஒரளவு மாறுபாடு ஏற்பட்டுள்ளது. எனினும் அப் புதுமாற்றத்தை இதில் ஏற்றவில்லை. - இதனை நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்ட கங்கை புத்தக நிலையத்தார்க்கு என் நன்றி உரியதாகும். ஆசிரியன்