பக்கம்:இன்றும் இனியும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் வேட்டை 47 அடையும் பயன் ஒன்றேயாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர். - அறிவுவழி மேற்கொண்ட இவர்கள் புகழ் சிறந்ததா? அன்றி, அன்புவழி மேற்கொண்ட அவர்கள் புகழ் சிறந்ததா? அறிவு அறிவு என்று கூவி, அறிவிற்கு வணக்கம் செலுத்தும் தற்காலத் தமிழ் நாடு ஒருவேளை இப்போர் வெறியர்களைப் பாராட்ட முன்வரலாம். ஆனால், உண்மையில் இவர்கள் புகழ் நிலை நின்றதா? இது நன்கு ஆராயற்பாலது.