பக்கம்:இன்றும் இனியும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் 81 திருக்கும்வரை எம்மொழியிலும் அதனை வெளியிட லாம். தனித் தமிழையே பயன்படுத்த வேண்டும் என்ற தொரு கட்டுப்பாட்டிற்காகத் தனித்தமிழ்ச் சொற்களைத் தேடி ஆராய முற்பட்டு அம் முயற்சியில் கருத்தைப் பலி கொடுத்தல் பொருத்தமுடையதாகாது. கூறவந்த பொருள் சாதாரணமானதாக இருப்பின் அதனால் ஒன்றுந் தவறில்லை. ஆனால், உயர்ந்ததொரு கருத்தைக் கூறுகையில் இம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கருத்தைப் பறி கொடுத்தல் ஆகாது. கருத்துக்கு மொழி உதவியே தவிர மொழிக்குக் கருத்து உதவியன்று. ஆனால், ஒரே கருத்தைத் தனித்தமிழ் மொழியாலுங் கூறலாம், பிறமொழி கலந்துங்கூறலா மென்றால், இரண்டாவது வகை புறக்கணிக்கப்பட வேண்டியதே; மொழி வளர்ச்சிக்கு அஃது ஏற்றதன்று. பன்னெடுங் காலமாக மிகவும் பண்பாடு பெற்றுயர்ந்த மக்களால் வழங்கப்பட்டு வரும் மொழி யாகிய நம்தமிழ் மொழி பொருட்செறிவில் ஏனைய மொழிகளோடு எவ்வித்திலும் தாழ்ந்ததன்று. இதன்கண் தோன்றி வளர்ந்த கவிதையே இது மிகத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒன்று என்பதற்குச் சான்றாகும். இத்தகைய மொழியில் பிறமொழி கலந்தே எழுத வேண்டும் என்பதில்லை. ஆனாலும் சில காலமாக நமது மொழியோடு கலந்த மொழிகள் உண்டு. நமது இலக்கண ஆசிரியர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டு இலக்கணம் செய்துள்ளனர். அவற்றை நீக்குதல் என்பது எளிமையானதன்று. நீக்க முயன்றால் இடர்ப்பாடு பெரிதாய் விளையும். எனவே, இம் முயற்சியைவிட்டு மொழிக்கு உண்மையாகவே ஆக்கந் தேடுபவர்கள் நல்ல கருத்தை நல்ல வகையில் நமது மெர்ழியில் வெளியிடப் பயிலுதல் நன்று. இ.இ.-6