பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

107


காட்சிகள் சிலவற்றைக் கண்டவன் மேலே அறிவித்துள்ளவாறு கூறினானா? இல்லவேயில்லை - பின்வருமாறு தான் கூறினான் - என்ன கூறினான்?

“எவராலும் கொண்டு போக வியலாத அமைதியான பெண்ணும், நன்கு பேணி வளர்க்கப்படுகின்ற ஒலி எழுப்பாத குழந்தையும் உள்ளனர்: (Thou still unravished bride of quietness, Thou foster child silence).

விருப்பம் இல்லாத கன்னிப் பெண்ணை ஆண்மகன் காமவெறி பிடித்துத் தொடர்கிறான். அவன் தொடாதபடி அப்பெண் போராடித் தப்பித்துக் கொள்கிறாள். அவளை அவனால் தொட முடியவில்லை. (What mad pursuit? What struggle to escape)

காதால் கேட்க முடியாத இனிய இசை - உள் உணர்வால் உணரக் கூடிய - கற்பனையால் உணரக்கூடிய இனிய இசை. மரத்தின் கீழே இருக்கும் அழகிய இளைஞனே! இசைப் பாடலை நீ என்றுமே நிறுத்த முடியாது; தொடர்ந்து இசைத்துக் கொண்டேயிருப்பாய்! அந்த மரத்தின் இலைகள் என்றுமே உதிரமாட்டா!

(Heard melodies are sweet,
but those unheard
Are Sweeter; therefore,
ye soft pipes play on;
Not to the Sensual ear,
but more endeared,
Pipe to the spirit
ditties of no tone;
Fair youth, beneath the trees,
thou const not leave
Thy song nor ever can
those trees be bare)