பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சுந்தர சண்முகனார்


துணிவான இளைஞனே! நீ விரும்பும் அந்தப் பெண்ணை அடைய வெற்றி இலக்கை (winning goal) நெருங்கி விட்டது போல் தோன்றினும், நீ அவளை முத்தமிட முடியாது. வருந்தாதே! அவள் மறைந்து கொள்ள மாட்டாள், அவளை நீ என்றும் காதலித்துக் கொண்டேயிருக்கலாம். அவள் இதே நிலையிலேயே இருப்பாள் - கிழவியாக மாட்டாள்; ஆதலின் அவள் அழகும் என்றும் நிலைத்திருக்கும்.

(Bold lover; never,
never canst thou kiss,
Though winning nearth goal—
Yet do not grieve;
She cannot fade,
though thou had not thy bliss,
For ever wilt thou love,
and she be fair!”)

இன்பூட்டும் மரக்கிளைகளே! உங்கள் இலைகள் உதிரமாட்டா! இலை தளிர்க்கும் இளவேனில் காலச் சூழ்நிலைக்கு வழியனுப்பு விழாவே (பிரிவு உபசாரமே) கிடையாது; என்றும் இளவேனிற் காலத்திலேயே நீங்கள் (மரங்கள்) இருக்க முடியும்.

(Ah happy, happy boughs!
that cannot shed
Your leaves, nor ever
bid the spring adieu;

மகிழ்ச்சியூட்டும் இன்னியங்கள் இசைப்பவர்கள் களைப்பின்றி எப்போதும் இசைத்துக் கொண்டேயிருப்பர்; இசை எப்போதும் புது இசையாகவே இருக்கும்.