பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

சுந்தர சண்முகனார்



“வினையின் தொகுதி காலத்தியலும்” (தொல் - சொல் எச்சவியல் -19) என்பது தொல்காப்பிய நூற்பா. வினையின் தொகுதி என்பது வினைத்தொகை.

“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (364). என்பது நன்னூல். எந்த வினைத் தொகையிலும் இடையில் ஒற்று மிகுதலோ, ஓரெழுத்து கெடுதலோ, ஒன்று மற்றொன்றாகத் திரிதலோ - எதுவும் கூடாது. வினைத் தொகை பற்றித் தெரிந்தால்தானே எந்த மாறுதலும் இன்றி இயற்கையாக எழுதமுடியும்! இந்தப் பயனோடு, இதில் உள்ள மொழி நயத்தைச் சுவைப்பதற்கு சாத்தனாரின் மணிமேகலை நூலிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம்:-

மாலைக்காட்சி ஒன்றைச் சாத்தனார் (ஷுட்டிங் செய்து) படம் பிடித்துக் கொடுத்துள்ளார். அதை நான் படிப்பவரின் உள்ளத்திரையில் (ஆப்பரேட் செய்து) போட்டுக் காட்டுவேன்:

ஒரு நாள் மாலை மயங்கும் நேரம் - ஒரு தாமரைத் தடாகம். காதலர்களாகிய சேவல் அன்னம் ஒன்றும் பெடை அன்னம் ஒன்றும் தடாகத்தில் தாமரை மலர்மேல் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. பெடை அன்னம் விளையாடியதால் அயர்ந்து ஒரு பெரிய மலர் மேல் அமர்ந்தது. அப்போது அம்மலர் இயற்கையாகக் குவிந்து மூடி பெடை அன்னத்தை மறைத்து அடக்கிக் கொண்டது. பெடையைக் காணாத சேவல் சுற்று முற்றும் தேடி, பின் தாமரை மலரால் மூடப்பட்டிருந்ததை அறிந்து, இதழ்களை - மெதுவாக அன்று-கண்டபடி விரைந்து கிழித்து பெடையை அழைத்துக் கொண்டு கரையேறி விட்டது. இதனை, மணிமேகலையில்-மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் உள்ள (123-126)