பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

சுந்தர சண்முகனார்


அம்மா... சோறு போடு எனச் சொல் சொல்லாகவும் பேசவில்லை. அம்மா சோறு போடு என இயற்கையான சொற்றொடராகவே பேசினர்.

ஏதோ குருட்டாம் போக்கில் மக்கள் மொத்தையாக - ஒலித் தொகுப்பாகப் பேசியவற்றிலிருந்து சொற்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பின், சொற்களிலிருந்து எழுத்துகள் பிரித்தெடுக்கப்பட்டன. நாளடைவில், எழுத்துகள் பற்றியும் சொற்கள் பற்றியும் சொற்றொடர்கள் பற்றியும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

1-2 தவறான புணர்ச்சி

எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யை எள்நெய் என்று குறிப்பிட்டனர். அது நாளடைவில், எள்நெய் - எள்நெய் எண்ணெய் - எண்ணெய் என்று சொல்லும் நிலை பெற்றது. பின்னர், எள் + நெய் என்பன போன்றவை சேர்ந்தால் எண்ணெய் என்பதுபோல் ஆகும் என்ற செயற்கையான விதி கிடைத்தது. விளக்கு எரிய ஊற்றும் எண்ணெயை, விளக்கு எண்ணெய் என்றனர். இது நாளடைவில், விளக்கு எண்ணெய் - விளக்கு எண்ணெய் - விளக்கெண்ணெய் - விளக்கெண்ணெய் என்று சொல்லப்படும் நிலையை அடைந்தது. இப்படி ஆகும் அமைப்புக்குப் புணர்ச்சி இலக்கணம் என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்த இலக்கணம் தவறான அமைப்பாகும்; எள் நெய் என்று சொல்வதும், விளக்கு எண்ணெய் என்று சொல்வதுமே தவறு இல்லாத பொருத்தமான வழக்காறாகும்.

1-3 பொருந்தும் புணர்ச்சி

முள் பொருந்திய தண்டை உடைய தாமரையை முள் தாள் தாமரை என்றனர். இது பின்னர் முட்டாள் தாமரை முட்டாட்டாமரை என்று ஒரு வகை இலக்கண விதிப்படி எழுதப்பட்டது. முட்டாட்டாமரை என்ற பெயர் உள்ள பொருள் எதுவும் இல்லை. முள் தாள் தாமரைதான் உள்ளது. இதுவே பொருத்தமானது.