பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சுந்தர சண்முகனார்



மூவர் தமிழ் என்பதில் மூவர் என்பவர் யார் -யார்? மூவர் தமிழ் என்பது எது? இதற்கு விடை, உமாபதி சிவா சாரியாரால் (உமாபதி சிவத்தால்) இயற்றப்பட்டதாகக் கூறப்படும் ‘திருமுறை கண்ட புராணம்’ என்னும் நூலில் உள்ளது.

இந்த நூலில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர் தொடர்பான செய்திகளும், இவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்கள் தொடர்பான செய்திகளும் பேசப்பட்டுள்ளன. இவர்கள் அருளிய தமிழ்ப் பாடல்கள் ‘மூவர் தமிழ்’ (9), ‘மூவர் செந்தமிழ்கள்’ (10), ‘மூவர் பாடல்’ (13, 22) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இம் மூவரும் ‘தமிழ் மூவர்’ (19) என்று ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனால், மூவர் யார் - யார்? என்பதும், மூவர் தமிழ் என்பது இம்மூவரும் பாடிய தமிழ்ப் பாடல்களைக் குறிக்கும் என்பதும் பெறப்படும். இனி, இந்த மூவர் தமிழ் பற்றிய வரலாற்றை, திருமுறை கண்ட புராணத்தில் உள்ளவாறு காண்பாம்.

இராச ராச சோழனிடம், அவ்வப்போது சிலர் வந்து, இந்த மூவரால் அருளப்பட்ட சிற்சில பாடல்களைப் பாடிக் காட்டினர். பாடலைக் கேட்டுச் சுவைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த மன்னன், இம்மூவரின் பாடல்கள் அனைத்தையும் அறியவேண்டும். அவை எங்கே உள்ளன எனத் தேடச் செய்தான். எங்கும் கிடைக்கவில்லை. பின்னர், நம்பியாண்டார் நம்பி யிருந்த திருநாரையூருக்கு வந்து, மூவர் பாடல்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தரல் வேண்டும் என நம்பியிடம் வேண்டுகோள் விடுத்தான். சிதம்பரத்து நடராசர் கோயிலில் ஓர் அறைக்குள் காப்பிட்டுக் கிடக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

இராசராசன் சிதம்பரம் சென்று, கை இலச்சினை (முத்திரை) இட்டு மேற்குச் சுற்றில் உள்ள அறையிைனைத்