பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சுந்தர சண்முகனார்



பட்டப் பகலில் நடந்த வரலாறு என்பது, இந்தக் காலத்தில் நாம் படிக்கின்ற வரலாற்று நூல் செய்தியாகும். அதாவது, நிகழ்ச்சி நடைபெற்ற காலம் - ஆண்டு - திங்கள் - நாள் - மணி, நிகழ்ச்சி நடைபெற்ற இடம், நிகழ்ச்சியை நடத்தியவர், அதன் காரணம், அதன் விளைவுகள் முதலியவை பற்றி நன்கு வெளிப்படையாக அறிந்து எழுதி வைத்திருக்கும் நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளும் வரலாறாகும்.

வைகறையில் மூடுபனியில் நடந்த வரலாறாவது: இந்த நேரத்தில் எதிரில் யாரோ வருகிறார் என்பதை ஒரு தோற்றமாக உணர்ந்து கொள்ள முடிகிறதே தவிர, தெளிவாக இன்னார் எனப் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதுபோல, நிகழ்ச்சி நடந்த நேரம் - இடம் - நிகழ்த்தியவர் முதலிய விவரங்களைப் போதிய அளவு தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல், இலக்கியங்களிலே கூறப்பட்டிருப்பவற்றைக் கொண்டு உய்த்துணர்வாக அறிந்து கொள்ளும் வரலாறாகும்.

அமாவாசை நள்ளிருளில் நடந்த வரலாறு எனப்படுவதாவது: ஞாயிறு - திங்கள் இவற்றின் ஒளியோ - விளக்கொளியோ இல்லாத நள்ளிருளில் பொருள்களைத் தடவிப் பார்த்துத்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அதுபோல, புதைப்பொருள் - அகழ்வாராய்ச்சி வாயிலாகக் கண்டுபிடித்துத் தோண்டி எடுக்கும் பொருள்களைக் கொண்டு ஒரு தோற்றமாகப் பழங்கால நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் வரலாறாகும். அரப்பா - மொகஞ்ச தாரோ-சிந்துவெளி நாகரிக்ம் இவ்வாறு கண்டுபிடித்துத் தெரிந்து கொண்ட அமைப்பேயாகும். இது போன்ற பன்ழய நாகரிகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன்.

இந்த மூன்றனுள், இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கற்பனையும் கலந்திருக்க